"விளையாண்டதுபோதும் ராகுல்.. வா.. கெளம்பலாம்..." நான் சொன்னதும் ராகுலின் முகம் சற்று சுருங்கியது.
"ஏன் அங்கிள்..?"
"போதுண்டா.. டைமாச்சு.. மம்மி தேடுவாங்க.. வீட்டுக்கு போ..."
ராகுல் பேட்டை தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். என் கையில் இருந்த பந்தைவாங்கிக்கொண்டான்.
"நீங்களும் வீட்டுக்கு வாங்க அங்கிள்...!! ஒரு காபி சாப்பிட்டு போங்க..!!"
"ஏன் அங்கிள்..?"
"போதுண்டா.. டைமாச்சு.. மம்மி தேடுவாங்க.. வீட்டுக்கு போ..."
ராகுல் பேட்டை தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். என் கையில் இருந்த பந்தைவாங்கிக்கொண்டான்.
"நீங்களும் வீட்டுக்கு வாங்க அங்கிள்...!! ஒரு காபி சாப்பிட்டு போங்க..!!"
ஐந்து வயது பையன், அந்த மாதிரி பெரிய மனிதன் தோரணையில் சொல்ல, எனக்கு லேசாக சிரிப்பு வந்தது.
"இல்லை.. நான் வரலை.. நீ போ..!!"
"ப்ளீஸ் அங்கிள்.. வாங்க..!! மம்மி எனக்கு புதுசா ஒரு டால் வாங்கி தந்திருக்கா.. அதை உங்ககிட்ட காட்டுறேன்.."
"இல்லை.. நான் வரலை.. நீ போ..!!"
"ப்ளீஸ் அங்கிள்.. வாங்க..!! மம்மி எனக்கு புதுசா ஒரு டால் வாங்கி தந்திருக்கா.. அதை உங்ககிட்ட காட்டுறேன்.."
"இல்லைடா.. நான் வரலை... நான் வந்தா உன் மம்மி நைநைன்னு ஏதாவது சொல்லிட்டு இருக்கும்..!! திட்டும்..!!"
"திட்டுமா..? உங்களுக்கும் மம்மிக்கும் பைட்டா..?"
"ப்ளீஸ் அங்கிள்.. எனக்காக வாங்க அங்கிள்.. மம்மிட்ட நீங்க பேசவே வேணாம்..!! நாம நேரா என் ரூமுக்கு போயிடலாம்..!! ப்ளீஸ் அங்கிள்...!! வாங்க.. ப்ளீஸ்....!!"
அவன் பிடிவாதமாய் கெஞ்ச, வேறு வழியில்லாமல் அவனுடன் நடக்க ஆரம்பித்தேன். கிரவுண்டை விட்டு வெளியே வந்து அவன் வீட்டை நோக்கி நடந்தோம். ராகுல் பெரிய மனிதன் போல முன்னால் செல்ல, நான் அவனை பின் தொடர்ந்தேன். அவனுடைய வீட்டை அடைவதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகும். அதற்குள் என்னை பற்றி சொல்லி விடுகிறேன். என் பெயர் அசோக். எம்.காம் படித்திருக்கிறேன். தனியார் வங்கியில் உத்தியோகம். கை நிறைய இல்லாவிட்டாலும், டீசன்டான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் சம்பளம். அப்பா கிடையாது. அம்மா இருக்கிறாள். அக்காவுக்கு இரண்டு வருடங்கள் முன்னால் திருமணம் ஆனது. அம்மா இப்போது எனது திருமணத்துக்காக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாள். நான்.. இதோ எனக்கு முன்னால் செல்கிறானே ராகுல்.. இவன் அம்மா யமுனாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன். ராகுலுக்கும் அப்பா கிடையாது. இவன் வயிற்றில் இருக்கும்போதே ஆக்சிடண்டில் இறந்துவிட்டார். மண வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே யமுனா விதவையாகிப் போனாள். புகுந்த வீடு கைவிட்டு விட, இப்போது மகனுடன் தனியாக வசிக்கிறாள். ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி பிரிவில் வேலை பார்க்கிறாள். யமுனாவை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். எங்கள் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளிதான் அவள் வீடு. என்னை விட ஐந்து வயது மூத்தவள். சிறுவனாய் இருந்த போது 'அக்கா.. அக்கா..' என்றுதான் அழைப்பேன். இப்போது காதலிக்க ஆரம்பித்த பிறகு பேர் சொல்லித்தான் அழைப்பது. இளம் வயதில் யமுனாக்கா விதவையாகி விட்டாள் என்று தெரிந்ததும் எனக்கு அவள் மீது ஒரு பரிதாம் வந்தது. புகுந்த வீட்டை விட்டு, மீண்டும் எங்கள் தெருவில் வந்து குடியேறியதும், அவள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். சோகத்தில் இருக்கும் அவளை சிரிக்க வைக்க, நிறைய முயற்சிகள் செய்வேன். ஏதாவது பொது விஷயங்களை பேசி அவளுடைய மனதை திசை திருப்ப முயல்வேன். யமுனா கொஞ்ச நாட்களிலேயே எல்லாவற்றையும் மறந்து சகஜ நிலைக்கு மாறி விட்டாள். நான்தான் இப்போது சகஜமாக இருக்க முடியாமல் திணறுகிறேன். யமுனாவை ஐந்து வயது பையனுக்கு அம்மா என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். மிக இளமையாக இருப்பாள். சந்தன நிறத்தில், கோயில் சிலை மாதிரியான தேகம். கொஞ்சம் பூசினாற்போன்ற உடலமைப்பு. களங்கமில்லாத சந்திரன் போன்ற வட்ட முகம். சற்றே பெரிய, கரிய, கதை பேசும் கண்கள். கூர்மையான மூக்கு, ஆப்பிள் துண்டங்கள் போல சிவந்த இதழ்கள். பெண்மைக்கு இலக்கணமாய் இன்ன பிற அங்கங்கள்.. தேவதை மாதிரி இருப்பாள். இந்த நான்கு வருடங்களில்.. எங்கே.. எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை.. யமுனா மீதான என் காதல்..!! ஆனால் இப்போது என் மனம் எங்கும் அவள்தான் நிறைந்து இருக்கிறாள். வாழ்ந்தால் அவளுடன்தான் வாழ வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறேன். நான் இன்னும் அவளிடம் உடைத்து சொல்லாவிட்டாலும், என்னுடைய காதல், என் மனதில் இருக்கும் ஆசை, அவளுக்கும் ஜாடைமாடையாக தெரியும். நான் சொன்ன மாதிரி ஐந்தே நிமிடத்தில் வீடு வந்தது. காலிங் பெல்லை அழுத்தினேன். யமுனாதான் வந்து கதவு திறந்தாள். என்னை நிமிர்ந்து பார்க்காமல், தன் மகனை முறைத்து பார்த்து கோபமாக சொன்னாள். "எங்கடா போய் சுத்திட்டு வர்ற..? காபி போடுறதுக்குள்ள ஆளை காணோம்...?" "அசோக் அங்கிளோட கிரிக்கெட் ஆட போனேன் மம்மி...!!" அவன் பரிதாபமான குரலில் சொல்ல, அவள் இப்போது என்னை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள். "ஓஹோ...!! நீதான் இவனை கூட்டிட்டு போய் கெடுக்குறதா..?" "கிரிக்கெட் விளையாடுறது.. கெடுக்குறதா..? என்ன பேசுற நீ..?" என்றேன் நானும் சற்று கோபமாய். "ஆமாம்.. கெடுக்குறதுதான்..!! ஹோம் வொர்க் பண்ற பையனை.. கூட்டிட்டு போய் கிரிக்கெட் ஆடுறது கெடுக்குறதுதான்...!!" "சரி விடு..!! உன்கிட்ட வாதாட என்னால முடியாது..!!" நான் அடங்கிப் பேசவும், அவள் தன் மகனிடம் திரும்பி சொன்னாள். "போடா..!! போய் ஹோம் வொர்க் பண்ணு..!! போ..!!" "மம்மி.. அந்த டாலை அசோக் அங்கிள்ட்ட காட்டிட்டு.. அப்புறமா..." "அதெல்லாம் ஒன்னும் வேணாம்..!! போ..!! போன்னு சொல்றேன்ல..?" |