Your link here each link 5$ payment *tikwebs@gmail*

INDIAOLX Free classifieds in india Free download HD Videos Free download mp3 songs Post ad world wide Indian goverment exams question papers

துரோகம் நடந்தது என்ன…?

கணவன்-மனைவியின் நெருக்கம் அடுத்தவனுக்கு தெரியாதவரைதான் சுகம். தெரிந்தால், சுமைதான் என்ற கருவை அடிப்படையாக வைத்து தயாராகிறது,  துரோகம் நடந்தது என்ன? மும்பை அருகே நடந்த உண்மை கதை இது. ஒரு இளம் போலீஸ் அதிகாரி தன் மனைவியுடன் தாம்பத்ய உறவில் ஈடுபடுகிற நேரத்தில், திடீர் என்று மின்சாரம் தடைபடுகிறது. போலீஸ் அதிகாரி மெழுகுவர்த்தியை எடுக்கப்போகிறார். அப்போது ஒரு உருவம் திடீரென்று போலீஸ் அதிகாரியின் மனைவியை கட்டிப்பிடிக்கிறது.
கணவர்தான் கட்டிப்பிடிக்கிறார் என்று மனைவி சும்ம இருந்து விடுகிறாள். அதை தன் செல்போனில் படம்பிடிக்கிறது, அந்த உருவம். செல்போனில் பதிவான அந்த ஆபாச படத்தை காட்டி, தன் ஆசைக்கு இணங்குபடி போலீஸ் அதிகாரியின் மனைவியை மிரட்டுகிறான் ஒரு இளைஞன். அவனுடைய மிரட்டலுக்கு அவள் பணிந்தாளா, இல்லையா? என்பதே கதை. இந்த படத்தில் புதுமுகங்கள் கிஷோர், சசி, லீனா ஆகிய மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் டெல்லிகணேஷ், அம்பிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தில், 6 படுக்கை அறை காட்சிகள் உள்ளன. லண்டன் ராஜா தயாரிக்க, கதை-திரைக்கதை-வசனம் எழுதி சமீர் டைரக்டு செய்கிறார். இவர், பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.
இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது அதில் உள்ள படுக்கையறை காட்சிகளையும் முத்தக் காட்சிகளையும் நீக்கி ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் லண்டன் ராஜா கூறும்போது, “இன்றைக்கு செல்போன்கள் பெரிய கலாசார சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்களின் தனிமையை விளையாட்டாக, செல்போனில் படம் பிடிக்கிறார்கள். அது இன்னொருவன் கையில் கிடைத்து அவர்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பது கதை. கதையின் தேவை கருதி படுக்கையறை காட்சிகளும் முத்தக் காட்சிகளும் இடம்பெற்றது.  இது நம் கலாசாரத்தை பாதிக்கும் என்று சொல்லி அந்த காட்சிகளை நீக்க சொன்னார்கள். நீக்கி விட்டோம். வரும் 11 ம் தேதி படம் வெளிவருகிறது” என்றார்.